நான் மட்டுமே உறங்கவில்லை
குறுந்தொகை 6, பதுமனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது
நள்ளென்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே.
Kurunthokai 6, Pathumār, Neythal Thinai – What the heroine said to her friend
In the still darkness of night,
words have died down,
everybody has sunk
into sweet sleep with no malice,
and the whole wide world sleeps.
I certainly am the only one
who is unable to sleep!
Notes: The heroine said this to her friend when the hero had gone to earn wealth for their marriage. திருமணப் பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்து ஆற்றாளாகிய தலைவி, நள்ளிரவில் யாவரும் துயிலவும் ‘யான் துயின்றிலேன்’ என்று தோழியிடம் கூறியது. மன்ற – மன்றவென் கிளவி தேற்றஞ் செய்யும் (தொல்காப்பியம், இடையியல் 17). நள்ளென்றன்றே (1) – உ. வே. சாமிநாதையர் உரை – செறிந்த இருளை உடையதாக இரா நின்றது, நள்ளென்னும் ஓசையை உடையதாயிற்று எனலுமாம். மாக்கள் (2) – திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – மாக்கள் என்று இழிவுதோன்றக் கூறினாள், உ. வே. சாமிநாதையர் உரை – ஐயறிவுடையோர் என்பது தாய் முதலியோரை, மாவும் மாக்களும் ஐ அறிவினவே (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் 32). முனிவின்று (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – இன்றி என்னும் வினையெச்சத்து இறுதி இகரம் செய்யுள் ஆகலின் இன்று என்று உகரமாகத் திரிந்தது, இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் தொன்று இயல் மருங்கின் செய்யுளுள் உரித்தே (தொல்காப்பியம், உயிர்மயங்கியல் 35). ஓர் யான் மன்ற துஞ்சாதேனே (4) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – எனக்கு உசாத்துணையாய் ஆற்றுவிக்கும் கடமையுடைய நீயும் இனிதே தூங்கினை என இடித்துக் கூறினபடியாம். நற்றிணை 348 – யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு கனை இருங்கங்குலும் கண்படை இலெனே. நனந்தலை – அகன்ற இடம், நனம் – நனவே களனும் அகலமும் செய்யும் (தொல்காப்பியம் உரியியல் 80).
Meanings: நள்ளென்றன்று – with dense darkness, with the sound ‘nal’ (நள் – நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிபு), ஏ – அசைநிலை, an expletive, யாமம் – night, சொல் அவிந்து – words have died down, இனிது அடங்கினர் – they have slept sweetly, ஏ அசைநிலை, an expletive, மாக்கள் – humans, people, mother and others in the family, முனிவு இன்றி – without stress, without malice, நனந்தலை – vast place, wide place, உலகமும் துஞ்சும் – the whole world sleeps, ஓர் யான் – I alone, மன்ற – தேற்றப்பொருளில் வரும் இடைச்சொல், a particle which implies certainty, துஞ்சாதேன் – I am not sleeping, ஏ – அசைநிலை, an expletive
திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழி, திவ்ய பிரபந்தம் 1689
மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன் வரை புரை திருமார்பில்,
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்ததோர் துணை காணேன்,
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பியங்கும்,
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வதொன்று அறியேனே.